கோயம்புத்தூர் சிட்கோ அருகே ரயில் தண்டவாளத்தில் கல்லை வைத்து, தண்டவாளத்தில் வரும் ரயிலை கவிழ்க்க முயன்றதாக உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களான ராகேஷ் யாதவ், கிஷோர் சவுஹான், பப்லு சவுஹான் ஆகிய மூன்று பேரை ரயில்வே போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ரயில்வே போலீசார் அபராதம் விதித்த ஆத்திரத்தில், தண்டவாளத்தில் கற்கள் வைத்து ரயிலை கவிழ்க்க சதி செய்ததாக காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.