சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த 93 வயதான மூதாட்டி ரஷ்யா பேகம் என்பவர் கடந்த புதன்கிழமை மாலை ரமலான் நோன்பை முடித்துவிட்டு நோன்பு கஞ்சி குடித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தான் அணிந்திருந்த பல் செட்டையும் சேர்த்து விழுங்கியுள்ளார். உடனே வலியால் துடித்த அவரை அவருடைய மகள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

தொடர்ந்து மூச்சு விட முடியாமலும் எச்சிலை விழுங்க முடியாமலும் அவதியுற்ற மூதாட்டியை மருத்துவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சுமார் 4 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு மூதாட்டி உணவு குழாயில் சிக்கி இருந்த பல் செட்டை உள்நோக்கி கருவி மூலமாக லாவகமாக எடுத்தனர். தற்போது அவர் நலமாக உள்ளார்.