விழுப்புரத்தில் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்ததாக கூறி இளைஞர் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விகுப்புறம் மாவட்டத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரும் அப்பகுதியைச் சேர்ந்த பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில்  அவர் அப்பெண்ணை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் பெண்ணின் உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து, நேற்று இருவருக்கும் திருமணம் செய்து வைத்த நிலையில், ராதாகிருஷ்ணன் இன்று தற்கொலை செய்து கொண்டார்.