ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் பிரதமர் மோடிக்கு  கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது, “அதானி குழுமத்தின் மீதான பங்கு சந்தை மோசடி குற்றச்சாட்டுகள் மிகவும் கண்டிக்கத்தக்கவை. பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர் செய்த மிகப்பெரிய ஊழல்.

இது குறித்து நேர்மையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மேலும் அதானி குழும நிறுவனர் கௌதம் அதானி மற்றும் சம்பந்தப்பட்ட அனைவருடைய பாஸ்போர்ட்களையும் பறிமுதல் செய்தால் தான் அவர்கள் நாட்டை விட்டு தப்பி செல்ல முடியாது. அதேபோல் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும். இந்த பிரச்சினையை நான் நாடாளுமன்றத்தில் எழுப்ப உள்ளேன்” என அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.