நேபாள ஜனாதிபதி ராம் சந்திரா பவுடல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ‘திடீரென ஏற்பட்ட வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது தொடர் கண்காணிப்பில் உள்ளார்’ என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. நேபாள மூத்த காங்கிரஸ் தலைவரான ராம் சந்திரா பவுடல், ஜனாதிபதியாக 2 வாரங்களுக்கு முன்புதான் பதவியேற்றார்.