நேபாளத்தின் புதிய ஜனாதிபதி ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட ராம் சந்திரா பௌடேல் உடல் நலக்குறைவால் டெல்லியை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு திடீரென நெஞ்சு மற்றும் வயிற்று பகுதியில் ஏற்பட்ட வலி காரணமாக காத்மாண்டுவில் உள்ள மகாராஜ்கஞ்சில் உள்ள திருபுவன் பல்கலைக்கழக போதனா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதன் பிறகு அவர் விமான மூலம் டெல்லியில் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வருடம் மார்ச் பத்தாம் தேதி அவர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.