மாரி செல்வராஜ்  இயக்கத்தில் உருவான பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் நெல்லையைச் சேர்ந்த தங்கராஜ் கதாநாயகனின் தந்தையாக நடித்திருந்தார். அவரது கிராமத்து கூத்து கட்டும் வேடத்தினை பலரும் பாராட்டி இருந்தனர். இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தங்கராஜ் இன்று சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார்.

இவருக்கு பேச்சுக்கனி என்ற மனைவி மற்றும் ஒரு மகளும் உள்ளனர். நாளை இவரது உடல் நல்லடக்கம்  செய்யப்படும் என  கூறப்படுகிறது. முதலில் போதிய வசதி இல்லாமல் சிறிய வீட்டில் வசித்து வந்த இவர் நெல்லை ஆட்சியர் விஷ்ணு உதவியுடன் பல்வேறு தன்னார்வலர்கள் இணைந்து புதிய இல்லம் சமீபத்தில் கட்டி கொடுத்தனர். அதேபோல் தங்கராஜ் மகளுக்கு ஆட்சியர் விஷ்ணு சிறப்பு உதவியாக அரசு அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணி நியமனம் செய்து கொடுத்தார். இந்நிலையில் தற்போது தங்கராஜ் உயிரிழந்திருப்பது  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.