அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்குபின், திடீரென்று ஏற்பட்ட நெஞ்சு வலியால் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் செந்தில் பாலாஜியை நேரில் பார்த்து நலம் விசாரிக்க முதல்வர் ஸ்டாலின் சற்றுமுன் விரைந்துள்ளார். உடல்நிலை குறித்து கேட்டறிந்த பின் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்த அவர், அமைச்சர் செந்தில் பாலாஜியை ED கைது செய்ததற்கு எதிராக  கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அறிக்கையில், ‘விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறிய பிறகும் நெஞ்சுவலி ஏற்படும் அளவு நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது. மனிதநேயமற்ற முறையில் அமலாக்கத் துறை நடந்துக் கொண்டது கண்டனத்திற்குரியது. வழக்கை சட்டரீதியாக திமுக எதிர்கொள்ளும்’ என தெரிவித்துள்ளார்.