நாடு முழுவதும் இன்று பல கல்லூரிகளிலும் முக்கிய படிப்புகளில் மாணவர்கள் சேர வேண்டும் என்றால் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். நீட் மற்றும் ஜேஇஇ உள்ளிட்ட 15 வகையான நுழைவு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்திராகாந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் எம் பி ஏ, எம்சிஏ படிப்புகளில் தொலைதூரக் கல்வியில் நுழைவுத் தேர்வு இன்றி மாணவர்கள் சேரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக 2023 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் சேர விரும்புவோர் https://ignouiop.samarth.edu/என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஜனவரி 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.