2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. அந்த வகையில் ஒவ்வொரு பட்ஜெட்டிலும் மேற்கொள்ளப்படும் முக்கியமான விஷயம் பட்ஜெட் பற்றாக்குறை. அது எவ்வாறு ஏற்படுகிறது என்பதை பற்றி தற்போது விளக்கமாக பார்க்கலாம்.

பட்ஜெட் பற்றாக்குறை என்பது அரசுக்கு கிடைக்கும் செலவு அதிகரிக்கும் போது பட்ஜெட் பற்றாக்குறை ஏற்படும். இயற்கை சீற்றம், இயற்கை பேரிடர் போன்ற எதிர்பாரா சூழ்நிலையில் அரசு கூடுதலாக செலவு செய்யும்போதும் பொருளாதாரத்திற்காக சில கொள்கை மாற்றங்களை அறிமுகப்படுத்தும்போது பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உண்டு.

பற்றாக்குறையின் வகைகள் மூன்று வகைகளாக பிரிக்கப்படுகின்றது. வருவாய் பற்றாக்குறை, நிதி பற்றாக்குறை, முதன்மை பற்றாக்குறை ஆகும். வருவாய் பற்றாக்குறை என்றால் ஒட்டுமொத்த வருவாயின் வருவாயைக்காட்டிலும் செலவு அதிகரிக்கும் போது வருவாய் பற்றாக்குறை ஏற்படும்.

இந்த பற்றாக்குறை ஏற்பட்டால் அரசு தினசரி தேவைக்கே நிதி பற்றாக்குறையில் இருக்கிறது எனப் பொருள். நிதி பற்றாக்குறை என்றால் வரி மற்றும் இதர வருவாய் மூலம் அரசு ஈட்டும் பணத்தை காட்டிலும் அதிக பணத்தை செலவிட்டால் நிதி பற்றாக்குறை ஏற்படும். முதன்மை பற்றாக்குறை என்றால் வட்டி போக அரசு வாங்கிய கடன் தொகையே முதன்மை பற்றாக்குறையாகும்.