ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில், பெண் நீதிபதி ஒருவரை ஆபாசமாக சித்தரிக்கும் விதமாக மார்ப்பிங் செய்த புகைப்படத்தை நீதிபதிக்கு அனுப்பிய மர்ம நபர் 20 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். மேலும், பணத்தை தரவில்லை என்றால் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவேன் என மிரட்டல் கடிதமும் அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதை பார்த்த சமூக ஆர்வலர்கள் பலரும் நீதிபதிக்கே இந்த நிலைமையா? என கருத்து தெரிவித்து வருகின்றனர்.