நீட் தேர்வானது மே மாதம் 5ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இதற்கான விண்ணப்பங்களை மாணவர்கள் neet.ntaonline.in என்ற இணையதளம் மூலம் பூர்த்தி செய்து வருகிறார்கள். விண்ணப்பப் பதிவுக்கான கடைசி நாள் மார்ச் 9ஆம் தேதி. இதற்கு முன்னதாக விண்ணப்பிப்பதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை என்பதை பார்க்கலாம்.

அதன்படி, விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் முன், அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் பத்தாம் மற்றும் பதினொன்றாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் உள்ளிட்ட சான்றிதழ்களை மாணவர்கள் கையில் வைத்திருக்க வேண்டும். மாணவர்களின் தற்போதைய பாஸ்போர்ட் மற்றும் போஸ்ட்கார்டு அளவிலான புகைப்படங்களும், அதில் பெயர் மற்றும் புகைப்படம் எடுக்கப்பட்ட தேதியும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.