உத்தரபிரதேசத்தில் கான்பூர் மாவட்டத்தில் உள்ள சென் பஸ்சிம் பாரா என்ற இடத்தில பயங்கர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது ஒரு தலித் குடும்பம் ஒரு வீட்டின் வழியே நடந்து சென்றுள்ளார்கள். அப்ப்போது ஒரு உயர் ஜாதிக் குடும்பம் அந்த தலித் பெண்ணை அவர்களின் காலில் விழச்சொல்லியுள்ளனர். ஆனால் அதற்கு அந்த பெண் மறுத்துள்ளார்.

இதனையடுத்து அவர்கள் தலித் பெண்ணின் தலை முடியை பிடித்து இழுத்து கீழே வீசி  தாக்கியுள்ளனர். பின்னர் அந்த பெண்ணின் வீட்டிற்கு தீ வைத்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்த  வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாதிக்கப்பட்டவர்களின் புகாரின் அடிப்படையில், போலீசார் அவர்கள் மீது எஸ்சி-எஸ்டி வழக்கு பதிவு செய்துள்ளனர்.