பொதுவாக ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் மளிகை பொருட்களும், இலவச அரிசியும் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலமாக அரசின் நிதி உதவியும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொது விநியோக திட்டத்தின் கீழ் துவரம் பருப்புடன் சேர்த்து மசூர் பருப்பையும் கொள்முதல் செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்ற பொதுநல மனு இந்து உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலித்து எட்டு வாரங்களில் தகுந்த உத்தரவை பிறப்பிக்கும்படி கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கூடுதல் செயலாளருக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தது.