அரசு பள்ளி மாணவர்களுக்கு அந்தந்த பள்ளியிலேயே நீட் உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களை நீட் மற்றும் ஜேஇஇ உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு தயார் செய்வதற்காக தமிழ்நாட்டில் 438 அரசு பள்ளிகளில் பயிற்சி மையங்கள் அமைத்து பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் அனைத்து அரசு பள்ளி மாணவர்களும் நீட் உள்ளிட்டவற்றுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில் விருப்பமுள்ள 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.