தமிழகம் முழுவதும் மக்களின் கருத்துக்களை அறிவதற்கு நீங்கள் நலமா திட்டம் வருகின்ற மார்ச் 6ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய முதல்வர், ஆட்சியர்கள் மற்றும் அமைச்சர்கள் மட்டுமின்றி முதலமைச்சராகிய நானும் நேரடியாக மக்களை தொடர்பு கொண்டு கருத்துகளை கேட்டறிய உள்ளேன். அரசு செயல்படுத்தும் திட்டங்கள் மக்களைச் சென்றடைகிறதா என்பதை உறுதி செய்யவே இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.