சமீப காலமாக ஆன்லைன் பண மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இன்றைய காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பலரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். இதனால் டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் தங்களுடைய பணத்தை இழந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது ஒருபுறமிருக்க மற்றொரு புறம் வித்தியாசமான மோசடிகளும் அரங்கேறி வருகிறது.

ந்தவகையில் ‘சதுரங்கவேட்டை’ பட பாணியில் சென்னையில் ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டு போலீசாரிடம் சிக்கியுள்ளது. தங்களிடம் உள்ள கண்ணாடியை அணிந்து பார்த்தால் எதிரில் இருப்பவர்கள் நிர்வாணமாக தெரிவார்கள் எனக்கூறி பரவலாக விளம்பரம் செய்துள்ளனர். இதனை நம்பி அந்த கும்பல் இருக்கும் விடுதிக்கு சென்றவர்களிடம், துப்பாக்கி காட்டி மிரட்டி பணம் பறித்துவந்துள்ளனர். இவ்விவகாரம் வெளியில்வரவே, போலீஸ் அக்கும்பலை கைது செய்துள்ளது.