பாகிஸ்தானில் பரவி வரும் நிமோனியா காய்ச்சலால் 200க்கும் அதிகமான குழந்தைகள் பலியாகி உள்ளன. பஞ்சாப் மாகாணத்தில் கடும் குளிர் காரணமாக நிமோனியா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த மூன்று வாரங்களில் மட்டும் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் ஐந்து வயதிற்கும் குறைவான 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இதில் லாகூரில் மட்டும் 47 பேர் பலியானதாக கூறப்படுகிறது. இந்தச் செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.