தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் நாளை மாலை 6:00 மணிக்கு மேல் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரப்புரை மேற்கொள்ளக் கூடாது. மீறி சமூக வலைத்தளங்களில் வாக்கு சேகரித்தால் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்துவதற்கோ அதில் வேட்பாளர்கள் பங்கேற்கவோ கூடாது. தேர்தல் விவகாரங்களை மக்களின் பார்வைக்கு வைக்க கூடாது எனவும் எச்சரித்துள்ளது.