தமிழக நிதிநிலை அறிக்கை நமது அரசின் கனவு, அது நாளை முதல் நனவாக வேண்டும், அனைத்து துறை அமைச்சர்கள் மற்றும் ஆட்சியர்கள் திட்டங்களை சிறப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். பட்ஜெட் நிதியை மட்டுமின்றி நீதியையும் குறிப்பாக சமூக நீதியை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. கடை கோடி மனிதனையும் மேம்படுத்தி தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்க வேண்டும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.