தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகையின் 7வது தவணை மார்ச் 15ஆம் தேதி நாளை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இல்லத்தரசிகளுக்கு உதவும் வகையில் தமிழக அரசு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குகிறது. இந்தத் தொகையை பயனாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. ஆறு மாதங்கள் தலா 1000 ரூபாய் என இதுவரை தமிழக அரசு சார்பில் 6000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மார்ச் மாதத்திற்கான தொகை நாளை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.