அறுபடை வீடுகளில் 3ஆம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்ல படிப்பாதை, யானை பாதை, ரோப் கார், மின் இழுவை ரயில் ஆகியவற்றை பயன்படுத்துகின்றனர்.

இந்த ரோப் கார் சேவைகள் பராமரிப்பு பணிக்காக தினமும் 1 மணி நேரமும், மாதத்துக்கு ஒரு நாளும், வருடத்திற்கு ஒரு மாதமும் நிறுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை திங்கள்கிழமை ரோப் கார் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், ரோப்கார் சேவை நாளை ஒரு நாள் மட்டும் நிறுத்தப்படுகிறது.