பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நாளை காலை டெல்லி செல்கிறார்.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளன. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ பாத யாத்திரையை தமிழகத்தில் மேற்கொண்டு வருகிறார். இன்று ராணிப்பேட்டை பகுதியில் தனது என் ‘மண் என் மக்கள்’ நடை பயணத்தை மேற்கொண்டுள்ள அண்ணாமலைக்கு திடீரென ஒரு அழைப்பு வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் நாளை காலை சரியாக 7 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு செல்ல உள்ளார்.

குறிப்பாக அண்ணாமலை செல்லக்கூடிய காரணம் என்னவென்றால் தமிழகத்தில் தேர்தல் கூட்டணி குறித்தும், அதற்கு என்ன மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டும் என்பது குறித்து பேசுவதற்காக டெல்லி புறப்படுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜ்நாத் சிங் உள்ளிட்டு வரை சந்திக்க உள்ளதாக தகவல் வேண்டும்.