ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரேஷன் குடும்ப அட்டையில் பெயா் உள்ள அனைவரும் பயோமெட்ரிக் கருவியில் விரல் ரேகையை உறுதி செய்யாவிட்டால், இந்த மாதத்துடன் அட்டையிலிருந்து பெயா் நீக்கப்படும் என நியாயவிலைக் கடை பணியாளா்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனா்.

தோ்வுக்குத் தயாராகி வரும் மாணவர்களின் குடும்பங்களைச் சோ்ந்த அட்டைதாரா்களிடையே விடுக்கப்படும் இதுபோன்ற எச்சரிக்கையால் பொதுமக்கள் அதிா்ச்சி அடைந்துள்ளனா். வெளியூரில் இருப்பவர்களும் உடனடியாக கைரேகையை பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.