முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு முகாம் தமிழகம் முழுவதும் 100 இடங்களில் இன்று நடைபெற்றது. இதனையடுத்து முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு சிறப்பு முகாம் நாளையும் செயல்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். புதிதாக திருமணம் ஆனவர்கள், விடுபட்ட குடும்பத்தினர் போன்றோர் இக்காப்பீட்டுத் திட்டத்தில் இணைப்பதற்கு ஏதுவாக  இந்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமானது இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை காப்பீடு முகாம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக நாளையும் இதேபோல் காப்பீடு முகாம் நடைபெற உள்ளது.