தமிழ்நாட்டில் தொடங்கப்பட உள்ள மாதிரி பள்ளிகளில் 10ம் வகுப்பில் சேர 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச்4ம் தேதி(நாளை) நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. நவீன வகுப்பறைகள், ஆய்வகங்கள், உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் 45 மாதிரி பள்ளிகள் அமைக்கப்பட உள்ளன. இப்பள்ளியில் 10ம் வகுப்பில் சேர நாளை காலை 10.30 முதல் 12 மணி வரை நுழைவுத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து மொத்தம் 240 மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட வேண்டும். இந்த தேர்வுக்கான இடம் மற்றும் ஏற்பாடுகளை முதன்மை கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள இருக்கின்றனர். மேலும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தேர்வு எழுத தகுதி பெற்ற மாணவர்களுடைய பட்டியலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். மேலும் தேர்விற்கு அழைத்து சென்று மீண்டும் கூட்டி செல்ல வேண்டிய பொறுப்பு ஆசிரியரையும் நியமனம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.