தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.  இந்த நிலையில் நாய் என்றைக்கும் சிங்கமாகாது, ஓநாயாக வேண்டுமானால் மாறலாம் என டிடிவி தினகரன் பதிலடி கொடுத்துள்ளார்.

தேனியில் பிரச்சாரத்திற்கு மத்தியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், துரோகிகள் கையில் அதிமுக இருக்கிறது. அதை மீட்டெடுக்கும் ஜனநாயக ஆயுதமாக அமமுக தொடங்கப்பட்டுள்ளது. என்று தெரிவித்தார். முன்னதாக தினகரன் வீட்டு காவல் நாயாக இருந்தோம், தற்போது சீரும் சிங்கமாக மாறிவிட்டோம் என்று முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசி இருந்த நிலையில் அதற்கு டிடிவி தினகரன் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார்.