டெல்லியில் இருந்து கோவாநோக்கி  சென்ற விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்துள்ளது. அப்போது விமானத்தில் பயணித்த பயணியின் நாய் திடீரென்று தொடர்ந்து கத்திக்கொண்டே இருந்துள்ளது. இதனால்  அதன் கூடையை திறந்து, அதை வெளியே எடுத்துள்ளார் பயணி ஆதனா . இதனையடுத்து ஆதனா என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும், சக பயணிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக வழக்குப் பதியப்பட்டது. மேலும், விமானத்தில் நாயின் அருகில் அமர்ந்திருந்த நியூசிலந்தைச் சேர்ந்த ஒரு தம்பதியிடம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் மன்னிப்புக் கேட்டது குறிப்பிடத்தக்கது.