ஸ்காட்லாந்து நாட்டில் கைல் சம்ப்ரூக் என்ற மலைப்ஏறும் வீரர் கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி தனது நாயுடன் ஹைலேண்ட்ஸ் பகுதிக்கு மலை ஏறுவதற்காக சென்று உள்ளார். அங்கு அவரும் அவருடைய நாயும் எதிர்பாராத விதமாக காணாமல் போயுள்ளனர். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று மலை மீட்பு குழுக்கள் மற்றும் கடலோர காவல் படையினர் இணைந்து ஒரு நாய் மற்றும் ஆணின் உடலை மீட்டு உள்ளனர்.

இது சம்ரூக் மற்றும் அவருடைய நாய் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனை அடுத்து தனது மகனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, அவருடைய குடும்பத்தினர் தேடுதலில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் “சம்ரூக்கின் மரணத்தில் சந்தேகத்திற்குரிய சூழ்நிலைகள் எதுவும் இல்லை” எனக் கூறியுள்ளனர்.