அதிமுக கட்சி விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, இடைத்தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடக்காது என்பதால் நாங்கள் தேர்தலை தற்போது புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். இதைப் பற்றி மட்டும் தான் இப்போது பேச முடியும்.

நாங்கள் எதார்த்த நிலையை புரிந்து இந்த முடிவை எடுத்துள்ளோம். இந்த இடைத்தேர்தலில் தேமுதிகவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசி இருப்பார். மேலும் என்டிஏ மற்றும் நாம் தமிழர் போன்ற கட்சிகளை பெரிய கட்சிகளாக எடுத்துக் கொள்ள முடியாது. எப்போதும் அதிமுக தான் பெரிய கட்சி என்று கூறினார்.