2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தென்காசி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக இசை மதிவாணன் என்பவரை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். இதைத்தொடர்ந்த இசை மதிவாணனுக்கு நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

கடந்த வாரம் இசை மதிவாணன் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடைபெற்ற நிலையில் விசாரணைக்கும் அவர் ஆஜராகி இருந்தார். விடுதலைப்புலிகள் அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக வந்த தகவலின் பெயரில் நாம் தமிழர் கட்சியினர் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.