நாம் தமிழர் கட்சிக்கு கொடுக்கப்பட்டிருந்த ‘கரும்பு விவசாயி’ சின்னம் சமீபத்தில் மற்றொரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை உருவாக்கியது. இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. உச்ச நீதி மன்றத்தில் தொடரப்பட்டமேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில், விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் அவசர வழக்காக கரும்பு விவசாயி சின்னம் வழக்கு நாளை காலை விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடைக்காத பட்சத்தில் அக்கட்சி தேர்தல் ஆணையத்திடம் ஆட்டோ சின்னத்தை வழங்க கோரிக்கை வைத்தாக தகவல் வெளியாகியுள்ளது.