நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது இதனால் அரசியல் கட்சியினர் தேர்தலுக்கு தயாராகி வருகிறார்கள். இந்த நிலையில் அனைத்து கட்சிகளும் தாங்கள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து அறிவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் இருந்து தேனி செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார்.

7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுவது குறித்து கேட்ட கேள்விக்கு, கடந்த முறை நடந்தது போல்தான் இந்த முறையும் நடக்கிறது என கூறியுள்ளார். மேலும், தாங்கள் போட்டியிடும் சின்னம், தொகுதி குறித்து நாளை மறுநாள் தெரிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.