தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஜெயசுதா. இவர் கடந்த மாதம் வெளியான வாரிசு திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு அம்மாவாக நடித்திருந்தார். இந்நிலையில் நடிகை ஜெயசுதா மலரும் நினைவுகளாக பேசியது தற்போது வைரலாகி வருகிறது. அவர் பேசியதாவது, சலங்கை ஒலி படத்தில் நடிப்பதற்கு கே. விஸ்வநாத் முதலில் என்னைத்தான் ஒப்பந்தம் செய்தார். அதற்காக எனக்கு அட்வான்ஸ் பணமும் கொடுத்தார். ஆனால் கமல்ஹாசன் தேதி கொடுக்காததால் படப்பிடிப்புக்கு தாமதம் ஏற்பட்டது. இதனால் நான் என்டி ராமராவ் படத்தில் நடிக்க ஒப்பந்தமானேன்.

இதனால் என்னால் சலங்கை ஒலி படத்தில் நடிக்க முடியாமல் போனது. நான் அட்வான்ஸ் படத்தை கே. விஸ்வநாத்திடம் திரும்ப கொடுத்த போது அவர் என் மீது கோபமாக இருந்தார். நீண்ட நாட்கள் அவர் என்னுடன் பேசாமல் இருந்தால். நான் சலங்கை ஒலி படத்தில் நடிக்காமல் போனது ஒரு வகையில் நல்லது தான். அந்தப் படத்தில் என்னுடைய தோழி ஜெயப்பிரதா அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் அந்த படத்தின் மூலம் ஜெயப்பிரதாவுக்கு நல்ல பெயர் மற்றும் புகழ் கிடைத்தது என்று கூறியுள்ளார்.