கன்னட சினிமாவில் வெளியான காந்தாரா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதால் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. 16 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட காந்தாரா திரைப்படம் 400 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் வரும் என தயாரிப்பு நிறுவனமும் காந்தாரா படத்தின் இயக்குனர் மற்றும் நடிகருமான ரிஷப் செட்டி அறிவித்துள்ளார். காந்தாரா படத்தை பார்த்துவிட்டு திரை உலக பிரபலங்கள் மற்றும் மத்திய மந்திரிகள் என பலர் படத்தை பாராட்டி இருந்தார்கள்.

அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காந்தாரா படத்தை பார்த்துவிட்டு நடிகர் ரிஷப் செட்டியை தன்னுடைய வீட்டிற்கு நேரில் அழைத்து பாராட்டி இருந்தார். இந்நிலையில் ஒரு பேட்டியில் நடிகர் ரிஷப் செட்டி காந்தாரா படத்தின் இரண்டாம் பாகம் வரும் என்று கூறிய போது, இரண்டாம் பாகத்தில் ரஜினி நடிப்பாரா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நடிகர் ரிஷப் செட்டி எதுவும் சொல்லாமல் சிரித்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார். மேலும் இதன் காரணமாக தற்போது காந்தாரா 2 திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பதாக தகவல்கள் தீயாக பரவி வருகிறது.