தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் வாரிசு. இந்த  படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா நடித்துள்ளார். இந்த நிலையில்  ராஷ்மிகா மக்கள் தன் மீது வைக்கும் விமர்சனங்கள் குறித்து மனமுடைந்து பேசியுள்ளார். அதில் அவர், எனது உடல் அமைப்பால் மக்கள் மத்தியில் விமர்சனங்களுக்கு உள்ளாகுகிறேன்.

நான் குண்டாக இருந்தாலும் தவறு என்கிறார்கள், உடற்பயிற்சி செய்து ஒல்லியாக இருந்தாலும் கேலி செய்கிறார்கள். அதிகம் பேசினால் கிரிஞ்ச் என்கிறார்கள். பேசவில்லை என்றால் திமிரு என்கிறார்கள். நான் என்ன செய்வது? சினிமாவை விட்டு வெளியேறிவிடவா? என கேட்டுள்ளார்.