நடிகை விஜயலட்சுமி தன்னை நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் சீமானை ஆஜராக கூறி இன்று இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில், சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மனு அளித்துள்ளார்.

அதில், காவல்துறை முன் நான் ஆஜராகும்போது என் மீது புகாரளித்த விஜயலட்சுமியும் ஆஜராக வேண்டும். ஒரே நாளில் ஒரே சமயத்தில் நான், விஜயலட்சுமி, வீரலட்சுமி ஆகியோரை வைத்து விசாரணை செய்ய வேண்டும். ஒரே நேரத்தில் மூவரையும் விசாரணை செய்து குற்றச்சாட்டின் உண்மைத்தன்மையை அறிய வேண்டும் என தெரிவித்துள்ளார்.