செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்திடம் கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், அதுதான் ஏற்கனவே கூறிவிட்டேன், பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. மாவட்ட செயலாளர்கள் 2014-ல் அளிக்கப்பட்டதை போல 14 இடங்கள் குடுத்தால் கூட்டணி வைத்துக்கொள்ளலாம் என கூறியதைதான் நான் கூறினேன்.

ஆனால் பத்திரிகையில் அவரவர் இஷ்டத்திற்கு எழுதினார்கள். இறுதியாக கூறுகிறேன் மீண்டும் ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் அதில் எடுக்கப்படும் முடிவே இறுதியாக இருக்கும் என அவர் கூறியுள்ளார்.