பிரபல சின்னத்திரை நடிகை ரேகா நாயர் சினிமாவிலும் பத்துக்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான பார்த்திபனின் இரவின் நிழல் படத்திலும் ரேகா நாயர் நடத்துள்ளார். இதில் ராணி என்ற கதாபாத்திரத்தில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக நடித்திருந்த நிலையில் இந்த நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இருப்பினும் மேலாடை இன்றி அரை நிர்வாணமாக நடித்துள்ளார் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

இந்நிலையில்

நடிகை ரேகா நாயர் 3 முறை தற்கொலைக்கு முயன்றதாக கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரவின் நிழல் படத்தின் மூலம் பிரபலமான ரேகா நாயரின் சமீபத்திய நேர்காணல் வீடியோ வைரலாகி வருகிறது. அதில், ‘எனது சான்றிதழ்கள் அனைத்தையும் கணவர் கிழித்துவிட்டதால் கோபத்தில் நான் தற்கொலைக்கு முயன்றேன். அதன்பின் பல டிகிரி படிக்க ஆரம்பித்தேன். இன்று பத்து பேருக்காவது தெரியும் அளவிற்கு வளர்ந்துள்ளேன்’ என கூறியுள்ளார்.