நாம் தமிழர் கட்சி, சீமானின் மனைவியின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், சாதிய ஆதிக்கம் கொண்ட கட்சியாக அது மாறி வருவதாகவும் அக்கட்சியிலிருந்து விலகியுள்ள கொங்குப் பகுதியைச் சேர்ந்தவரும், மாநில ஒருங்கிணைப்பாளருமான ராஜா அம்மையப்பன் குற்றம் சாட்டியுள்ளார்.

‘முழுக்க முழுக்க சாதி என்ன என்று கேட்டுவிட்டுத் தான் கட்சியில் சீட்டுக் கொடுக்கிறார்கள். அதான் இன்றைய நாம் தமிழர் கட்சியின் நிலை’ என்றும் சீமானை சுற்றி உள்ளவர்கள் தங்களை நெருங்க விடுவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.