ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனை நாட்டிலேயே  முதல் முறையாக மருத்துவம் சார்ந்த பொருட்களின் போக்குவரத்துக்கு ட்ரோன்களை பயன்படுத்த தொடங்கியுள்ளது. ட்ரோன் மூலமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து 60 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கோர்தா மாவட்டத்தில் உள்ள டங்கி சமுதாய நல மையத்திற்கு ரத்தம் அனுப்பப்பட்டுள்ளது. இது ஒடிசாவில் முதல் முறையாக ரத்த பைகள் ட்ரோன் மூலம் மாற்றப்பட்டுள்ளது.