நாட்டின் பெயருக்கு காங்கிரஸ் அவப்பெயர் ஏற்படுத்தி விட்டதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். பிஹாரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், மத்தியில் ஆட்சியில் இருந்தபோது உலக அரங்கில் நாட்டின் பெயருக்கு காங்கிரஸ், ஆர்ஜேடி கட்சிகள் களங்கத்தை ஏற்படுத்தி விட்டதாகவும், ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் தனது அரசு எடுத்த நடவடிக்கைகளால் இந்தியாவின் மதிப்பு உயர்ந்திருப்பதாகவும் கூறினார்