உலகம் முழுவதுமே தற்பொழுது பொருளாதாரப் பண வீக்கம் வணிக நிறுவனங்களை கவலைக்கு உள்ளாக்கி இருக்கும் நிலையில் சமையல் எண்ணெய் விலையில் அதிரடியான மாற்றம் ஏற்பட்டுள்ளது கவனிக்கத்தக்க வகையில் உள்ளது.  கடுகு, சோயாபீன்ஸ், பருத்தி மற்றும் நிலக்கடலை போன்ற எண்ணெய் வித்துக்களின் வரத்து குறைந்து வருகிறது. இதனால் கடுகு, நிலக்கடலை, சூரியகாந்தி போன்றவற்றின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு குறைவாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

எண்ணெய் இறக்குமதியாளர்கள் இறக்குமதி செய்யப்பட்ட சமையல் எண்ணெய்யின் விலையை விட ஒரு கிலோவுக்கு இரண்டு முதல் மூன்று ரூபாய் வரை குறைவாக விற்பனை செய்கிறார்கள். இதன் காரணமாக சமையல் எண்ணெய்க்கான தேவை 10 சதவீதம் அதிகரித்துள்ளது.  எண்ணெய் நிறுவனங்கள் இழப்பை சந்தித்து வரும் நிலையில் விற்பனையை அதிகப்படுத்தும் நோக்கத்தில் விலை குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.