ரிசர்வ் வங்கி சில்லறை காசுகளை வழங்கும் இயந்திரங்களை நாடு முழுவதும் பொருத்தப் போவதாக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் வங்கிக்கு சென்று நேரடியாக பணம் எடுப்பதை விட ஏடிஎம் மையத்திற்கு சென்ற தான் அதிக அளவு பணம் எடுக்கிறார்கள். இதனால் தற்போது சில்லறை காசுகளை வழங்கும் ஏடிஎம் இயந்திரங்களை நாடு முழுவதும் பொருத்த உள்ளதாக புதிய அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

இந்த இயந்திரத்தில் க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்வது மூலம் சில்லறைகளை பெற்றுக் கொள்ளலாம். முதற்கட்ட சோதனை ரீதியாக நாட்டில் உள்ள 12 முக்கிய நகரங்களில் இந்த சில்லரை இயந்திரம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏடிஎம் மையத்தில் அதிக அளவில் 500 ரூபாய் நோட்டுகள் வருவதால் சில்லறைகளை ஊக்குவிக்க இந்த இயந்திரம் செயல்பட உள்ளது.