நாட்டின் 77வது சுதந்திரதினம் தலைநகர் டெல்லியில் செவ்வாய்க் கிழமை கொண்டாடப் பட இருக்கிறது.  பிரதமர் நரேந்திர மோடியும் சென்னை கோட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் கொடியேற்றவுள்ளனர். இதற்காக இன்று முதலே அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 40,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். டெல்லி செங்கோட்டை பல அடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது