. அரசின் சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதற்கு ஆதார் எண் மற்றும் பான் கார்டு எண் கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. PPF, சுகன்யா சம்ரித்தி யோஜனா, SCSS, தபால் அலுவலக சேமிப்பு திட்டம் உள்ளிட்ட திட்டங்களில் முதலீடு செய்வதற்கு பான் மற்றும் ஆதார் கட்டாயம் தேவை. அரசின் சிறுசேமிப்பு திட்டங்களுக்கான கேஒய்சி யின் ஒரு பகுதியாக ஆதார் எண் மற்றும் பான் கார்டு எண் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.

இனிவரும் நாட்களில் அரசின் சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதற்கு குறைந்தபட்சம் ஆதார் எண் கொடுப்பது கட்டாயமாகும். இந்த கணக்குகள் ஆதார் இல்லாமல் தொடங்கப்பட்டால் கார்டை 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கணக்கு இருப்பு 50 ஆயிரத்திற்கும் மேலிருந்தால் பான் கார்டை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1 முதல் இது கட்டாயமாகப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.