இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றன. இதற்கு எதிராக அரசு என்னதான் சட்டம் இயற்றினாலும் சில காமக் கொடூரர்கள் இது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். தினம் தோறும் ஏதாவது ஒரு மூலையில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேரி கொண்டு தான் இருக்கின்றன.

இந்நிலையில்  பெங்களூரில் 19 வயது இளம்பெண் காரில் கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . கர்நாடக மாநிலம் கோரமங்களா பகுதியில் 19 வயது அதிக தக்க இளம் பெண் ஒருவரை காரில் வந்த மர்ம நபர்கள் கடத்திச் சென்று காரில் வைத்தே பலமுறை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு இறக்கிவிட்டு சென்றனர். கடந்த 15 ஆம் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.