ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானின் Mi-17 ரக ஹெலிகாப்டர் ஒன்றை ஏவுகணை மூலம் அழித்ததாக இஸ்ரேல் ராணுவம் வீடியோ ஒன்றை வெளியிட்டது.
ஆனால், அந்த வீடியோவில் அழிக்கப்பட்டது உண்மையான ஹெலிகாப்டர் அல்ல, அது எதிரிகளை ஏமாற்றுவதற்காகத் தரையில் வரையப்பட்ட ஒரு தத்ரூபமான முப்பரிமாண (3D) ஓவியம் என்று சமூக வலைதளங்களில் விவாதம் கிளம்பியுள்ளது.
செயற்கைக்கோள் மற்றும் ட்ரோன்களை திசைதிருப்ப ஈரான் இதுபோன்ற மரக்கட்டை மாதிரிகள் மற்றும் ஓவியங்களைப் பயன்படுத்துவது ஒரு போர் தந்திரம் (Decoy) என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மில்லியன் டாலர் மதிப்புள்ள ஏவுகணையை ஒரு சாதாரண ஓவியத்தின் மீது வீசி இஸ்ரேல் ஏமாந்துவிட்டதாக ஈரான் ஆதரவாளர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். இருப்பினும், அழிக்கப்பட்டது உண்மையான ஹெலிகாப்டர் தான் என்று இஸ்ரேல் தரப்பு ஆதரவாளர்கள் வாதிட்டு வருகின்றனர்.
2026 மார்ச் மாத தொடக்கத்தில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில், ஈரானின் 80 சதவீத வான் பாதுகாப்பு அமைப்புகள் அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ள சூழலில், இந்த “ஓவிய ஹெலிகாப்டர்” விவகாரம் ஒரு பெரிய உளவியல் போராக மாறியுள்ளது.
Looks like the Israeli Air Force struck a decoy of an Iranian Mil Mi-17 helicopter painted on the ground. pic.twitter.com/mtEznE308A
— Status-6 (War & Military News) (@Archer83Able) March 4, 2026
“>
இஸ்ரேல் ராணுவம் இது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கவில்லை என்றாலும், போர்க்களத்தில் நிஜமான இலக்குகளை அடையாளம் காண்பதில் உள்ள சவால்களை இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது.
