தென்னிந்திய சினிமாவில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக உச்ச நடிகைகளாக கொடி கட்டி பறப்பவர்கள் த்ரிஷா மற்றும் நயன்தாரா. இவர்கள் இருவரும் பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து தற்போது வரை சினிமாவில் உச்ச நடிகைகளாக திகழ்கிறார்கள்.
நடிகை திரிஷா மற்றும் நயன்தாரா இடையே பிரச்சனை எனவும் பல வருடங்களாக அவர்கள் பேசிக் கொள்வதில்லை என்றும் சினிமாவில் ஏற்கனவே ஒரு தகவல் பரவி வருகிறது. விஜய் மற்றும் திரிஷா இடையே பிரச்சனை இருக்கிறது என்ற தகவல் கோலிவுட் வட்டாரத்தில் இதுவரை ஓயாத நிலையில் தற்போது இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் நிலையில் திரிஷா மற்றும் நயன்தாரா இணைந்து வெளியிட்ட புகைப்படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு செம விருந்தாக அமைந்துள்ளது.
View this post on Instagram
அதாவது இருவரும் துபாய் சென்டர்ல நிலையில் அங்கு ஒன்றாக புகைப்படங்கள் எடுத்துள்ளனர். மேலும் இது தொடர்பான புகைப்படங்களை நடிகை நயன்தாரா தன்னுடைய எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃப்ரெண்ட்ஷிப் பாடலோடு வெளியிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் பலரும் மிகவும் உற்சாகமாக பதிவிட்டு வருகின்றனர்
https://x.com/i/status/2013215571240693766
