தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போமே தவிர மத்திய பாஜக அரசு போல பழிவாங்கும் செயலில் ஈடுபட மாட்டோம் என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அரசு மருத்துவரிடம் லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத்துறை அதிகாரியிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை கைது செய்தனர். இந்த நிலையில் கைது நடவடிக்கை நீதி நியாயத்தை நிலை நாட்டுவதற்காக தான் யாரையும் மிரட்டுவதற்காக இது போன்று செய்துவிட்டு பாதியில் நிறுத்த மாட்டோம் என்று கனிமொழி கூறியுள்ளார்.